கொழும்பு மாநகர சபையின் மேயருக்கான உத்தியோகப்பூர்வு இல்லத்தில் உள்ள மலசலக்கூடத்தை நவீன மயப்படுத்துவதற்காக 1.4 மில்லியன் ரூபாய் நிதி கொழும்பு மாநகர சபையினால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநாகர சபையின் உறுப்பினர் சுமித் பஸ்ஸபெரும தெரிவித்துள்ளார்.
நேற்று(16) நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் அமர்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைக்குற்பட்ட நகரங்களில் உள்ள பொது மலசலக்கூடம் சுகாதாரமற்றவையாக இருக்கின்ற நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவு செய்வது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.