ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலை வெடித்து சிதறியமை காரணமாக 37 வீடுகள் வரையில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டதன்காரணமாக நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளதுடன் மேலும் பல மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.