எதிர்கட்சி, அனர்த்த நிலவரங்கள் குறித்த பாராளுமன்ற விவாதத்தை கோருகிறது

நாட்டில் நிலவும் அனர்த்த நிலவரங்கள் தொடர்பில் இன்று(22) பாராளுமன்றத்தில் விஷேட விவாதத்தை நடத்துமாறு கூட்டு எதிர்கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பான கோரிக்கை கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவினால் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில், இன்று இடம்பெறவுள்ள விவாதத்தை இரத்து செய்து இந்த விவாதத்தை நடத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.