20வது திருத்தச் சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக இன்று(22) முன்வைக்கப்படவிருந்த நிலையில் குறித்த சட்டமூலம் பிற்போடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை இன்று முன்வைக்கப்படவிருந்த போதும், அசாதாரண காலநிலையை கருத்தில் கொண்டு அதனை பிற்போட தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.