“முஸ்லிம் மக்களுக்கு தவறான சிந்தனைகளை வழங்கி ராஜபக்ஷ அரசுக்கு எதிராக அன்று பிரச்சாரம் செய்யப்பட்டவை பொய்யானவை என தற்போது முஸ்லிம் மக்கள் புரிந்துள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் முஸ்லிம் மக்கள் எவ்வித பயமுமின்றி வாழ வழிவகுத்துத் தருவதாகவும் உறுதியளிக்கிறேன்..” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.
பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மில்பர் கபூரின் ஏற்பாட்டில் நேற்று(27) பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமே உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வீடியோ;