புகையிரத சாரதிகளின் விடுமுறைகள் இரத்து…

புகையிரத சாரதிகள், காவலர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு, இன்று(29) மாலை 4 மணிமுதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை, ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.