கொழும்பு – 02 பார்க் வீதியில் அமைந்துள்ள பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான அலுவலகம் நேற்றிரவு(30), குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனையிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய சோதனை ஆணைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி முறி தொடர்பான சில முக்கிய தகவல்களை பெற்று கொள்வதற்காகவே அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.