பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரித்தமை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.