மலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் விலை நேற்று(31) 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் மழைக்காரணமாக மலையக பகுதி மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.