இன்று(03) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புகள் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் முரண்பாடுகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு, எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு வரை தொடர உள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த பணிப்புறக்கணிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.