பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் இன்று(04) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கெப்பட்டிபொல மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
இந்நிலையில், தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.