பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக கைத்தொலைபேசி “app” வகையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.
பகிடிவதையை கட்டுபடுத்தும் பொறுப்பு உபவேந்தர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் ஆகியோரை சாரும் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, புதிய தொலைபேசி app ஐ அறிமுகம் செய்யும் நிகழ்வில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பகிடிவதை தொடர்பான 280 சம்பவங்கள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பகிடிவதையினால் அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ள விரும்புவதில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.