சீ.ஐ.டி இடம் வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு…

ஊடகவியலாளர் கீத் நொயார் அவர்களை கடத்திச் சென்று தாக்கியமை குறித்த சம்பவம் தொடர்பில் தான் எச்சந்தர்ப்பத்திலும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குமூலம் அளிக்க குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தான் தினம் ஒன்றினை கோரியபோதிலும் இதுவரை உத்தியோகபூர்வமாக தினம் ஒன்று அறிவிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.