இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மெண்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்…

பேர்பர்ச்சுவல் டிசரிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடம் மூன்று சந்தர்ப்பங்களில் 30 லட்சம் ரூபாய்க்கான 3 காசோலைகளை, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் தனது மேலதிக விசாரணை அறிக்கை மூலம் கோட்டை மஜிஸ்ட்ரேட் மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (07) இதனை அறிவித்துள்ளது.