மண்ணெண்ணெயின் விலை இன்று(11) முதல் குறைக்கப்படவிருப்தாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
மீன்பிடி சமூகம் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத-ஆராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 25 முதல் 30 ரூபா வரையான தொகையால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.