இலண்டனில் உள்ள இலங்கை இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியரை கைது செய்யுமாறோ அல்லது நாட்டிற்கு திருப்பியனுப்புமாறோ தாம் கோரவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஊடகங்களில் வெளிவந்த இது குறித்த செய்திகளில்எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்ற போது குறித்த இணையத்தள ஆசிரியரை லண்டனில் இருந்து திருப்பியனுப்புமாறு ஜனாதிபதி கோரியதாக ஞாயிறு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.