கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்காக இன்று(12) திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பூங்கா மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.
பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மகிந்த சமரநிங்க உள்ளிட்டோர் குறித்த அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.