தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பிய மேத்யூஸ்…

இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இவர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , கடந்த போட்டியின் போது உபாதைக்கு உள்ளான லஹிரு கமகேவும் இன்று நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.