ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.