கிரிவெஹர ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசோல சம்பத் மற்றும் ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.