Update – ஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, இன்று(19) ஹேமாகம மேல் நீதிமன்றினால் எதிர்வரும் 22ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++++++++++ UPDATE 07:50 am

ஞானசார தேரருக்கான மேன்முறையீட்டு மனு இன்று(19) ஆராய்வு…

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று(19) ஆராயப்படவுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.