வாக்காளர் இடாப்பில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கம்…

கடந்த வருடம் வாக்காளர் இடாப்பில் இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 481 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட தேர்தல் திணைக்களத்தின் மேம்பாட்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பதிவுகளில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களை, அவர்களது உரிய முகவரிக்கு மாத்திரம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரே அடையாள அட்டை இலக்கத்தில் இருவேறு நபர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பில் உரிய தரப்பினரின் ஊடாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.