அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தை, ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் என, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரியுள்ளார்.
பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் சுமித், கெமரன் பன்க்ராப்ட் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் கனடாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் உள்நாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டீவன் சுமித், நியுயோர்க்கில் இரவு விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தும் படம் ஒன்று பல பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.
இவ்வாறு அவர் ஊடகங்களால் துரத்தப்படுவது, அவரை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் என டெரன் சமி மேலும் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
