கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் இன்று(01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பொழியும் போது கடும் காற்று வீச கூடும் என்பதுடன் மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45Km வேகத்தில் வீச கூடும் எனவும் குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.