2018 பிபா – காலிறுதியில் விளையாடும் கடைசி 02 அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று…

2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், காலிறுதியில் விளையாடும் கடைசி 02 அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று(03) இடம்பெறவுள்ளன.

அதன்படி, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், கொலம்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று(03) இடம்பெறவுள்ளன.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பிரான்ஸ், உருகுவே, ரஸ்யா, பெல்ஜியம், பிரேஸில் மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.