தபால் ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை நாளைய(04) தினத்திற்கு முன்னர் உரிய முறையில் வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் 06 நாட்களுக்குறிய சம்பளத்தை வழங்காதிருக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டிருந்தார்.