எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்முறை பற்றி விவாதிக்கும் வகையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், ராஜபக்ஷவுடனான உத்தியோகபூர்வ சந்திப்பிற்கான திகதி உறுதி செய்யப்படாத போதிலும், விரைவில் இச்சந்திப்பு நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.