விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இங்கிரியவில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த மருந்து வகைகளின் விலை இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக இருந்தது. அரசாங்கம் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரை குறைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரு புற்றுநோய் மருந்து நிறுவனங்கள் இலங்கையில் இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.