வெங்கட் பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக முத்தையா முரளிதரனை சந்தித்து பேசி இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை நிறைய திருப்பங்கள் நிறைந்தது. அவர் பந்து வீசும் முறையை சந்தேகித்து சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நிறைய சோதனைகள் வைத்தது. அவற்றில் இருந்து மீண்டு வந்து உலக சாதனைகளை படைத்தார்.
கிரிக்கெட் மீது அதீத விருப்பம் காட்டும் வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையப்படுத்தி சென்னை 600028 படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.