2018 ஆரம்பம் முதல் கடந்த 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்திய நாணயத்தின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை வீதங்களை ஆராய்ந்து அவுஸ்திரேலிய டொலர், கனேடிய டொலர் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையிலும் ரூபாவின் பெறுமதி உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.