தாய்லாந்து பிரதமர் அடுத்த வாரம் இலங்கைக்கு…

எதிர்வரும் 12 ஆம் திகதியன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், படைத்தரப்பு முக்கியஸ்தர்களையும் அவர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.