அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவும், சமமான கல்வி வாய்ப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் ஆசிரியர்களின் தகுதி போன்று கல்வி வகைகள் சம்பந்தமாக இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட “கல்வி கண்காணிப்பு சபை” ஒன்றினை அமைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வியின் தரத்தை மேம்படுத்தும் அரசின் கொள்கை செயற்பாட்டின் கீழ் குறித்த இந்த கண்காணிப்பு சபை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சின் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல் திறன் ஆய்வு சம்பந்தமான மேலதிக செயலாளர் கலாநிதி மதுரா வெகெல்ல தெரிவித்திருந்தார்.