கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை…

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை(07) நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

நாளை(07) காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

கோட்டே மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.