புறக்கோட்டை – செட்டியார்தெருவில் இன்று(09) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.