டுபாய் நாட்டில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பாதாள உலக குழு தலைவர் கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளர் நேற்று(09) இரவு போதை பொருளுடன் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளரான அவர் பல போதை பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடையதாகவும், அவருக்கு எதிராக மனித கொலை குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.