கல்குடா பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து 3 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸ் நற்சான்றிதழ் வழங்குவதற்காக அவர் 05 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதுடன், அதில் 03 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.