கோத்தபாயவை தோற்கடிக்க களத்தில் ‘றோ’ அமைப்பு…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கோத்தபாய ராஜபக்சவை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டு எதிர்க்கட்சின் முக்கியஸ்தர்கள் சிலர் றோ உடன் இணைந்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஒன்றை தொடர வைக்கும் நோக்கிலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.