கண்டி – திகன கலவரத்தில் கைதாகி அனுராதபுர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மஹசொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே நேற்று(12) முதல் அவர் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.