இரசாயன ஆலையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு…

சீனாவில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.