சபாநாயகர் தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு கையொப்பமிட்டார்… (Update)

கடந்த 05ம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று(17) கையொப்பம் இட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிறப்புச் சோதனைக்குப் பின்னர் குறித்த சட்டமூலமானது நேற்று(16) அரச அச்சகத்திற்கு அச்சிற்காக அனுப்பப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

R.Rishma