அண்மையில் குழப்பகரமான கருத்துக்களை வெளியிட்டு வந்த சட்டத்தரணி சுகந்திகா பெர்னாண்டோவினது சங்கத்தின் உறுப்புரிமையினை தற்காலிகமாக தடை செய்ய சங்கத்தின் மாதாந்தம் கூடும் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவரினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சிலாபம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக முறைகேடான கருத்துக்கள் என்பவற்றினை மேற்கோள்காட்டி சங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு, நெடுநேர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
R.Rishma