பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை விநியோகிக்க நடவடிக்கை…

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப்பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கான 50Kg எடை கொண்ட உர மூடை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயிர்களுக்கான உரம் 50Kg மூடை 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இம்முறை சிறுபோகத்திற்கு தேவையான உரம் அரசாங்கத்திற்குட்பட இரண்டு உர நிறுவனங்களினால் விநியோகிக்கப்பட்டது, ஏனைய பயிர்களுக்கான உர வகை தனியார் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

R.Rishma