மேல் மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது குழுவுக்கான பயிற்சி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகும் என்று மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் விமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.