வெளிநாட்டு பெண்ணினை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு – தனுஷ்க குணதிலக பொலிசாரால் கைது…?

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிசுக்கு வெளிநாட்டு பெண்கள் இருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நண்பரால் குறித்த வெளிநாட்டு பெண்களுக்கு துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தனுஷ்க குணதிலகவும் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது சர்வதேச போட்டித் தடையும் விதித்துள்ளது.