நோர்வே யுவதி(26) ஒருவருக்கு கொள்ளுப்பிட்டி ஹோட்டல் அறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிசினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்பில் தற்போது இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஹோட்டல் அறையினை பணம் கொடுத்து ஒதுக்க தனுஷ்க குணதிலக 200 டொலர்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவராலேயே அவரது நண்பன் அழைக்கப்பட்டதாகவும் குறித்த நண்பராலேயே தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தனுஷ்க சந்தேகத்தின்பேரில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு துணையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.