2 கோடி ரூபா கையூட்டல் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று(24) அவர்கள் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.