இன்று இரவு 09 மணி முதல் நீர் வெட்டு…

அம்பத்தலே நீ்ர் சுத்திகரிப்பு நிலையம் முதல் தெஹிவளை வரையான நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(28) இரவு 09 மணி முதல் நாளை(29) காலை 6 மணிவரை 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வௌ்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ், இரத்மலானை, களுபோவில, நெதிமால, நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.