வீரர்கள் எவரேனும் ஒழுக்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டிருந்தால், அதற்கான விளைவுகளுக்கும் அவர்கள் முகங் கொடுக்க வேண்டும் என தனுஷ்க குணதிலக தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கடந்த 28ம் திகதி தம்புள்ளையில் தெரிவித்திருந்தார்.
“வீரர் ஒருவரை இழப்பது உண்மையில் வருத்தமாக உள்ளது. என்றாலும் ஒழுக்கயீனமான நடைமுறைகளுக்கு எம்மால் இடமளிக்க முடியாது. அவர்கள் அவதானம் மிக்க செயல்களில் ஈடுபடுமாயின் அதற்கான பின் விளைவுகளுக்கும் முகங் கொடுக்க வேண்டும். அவர்களால் சிறந்த வீரராக முடியாது. அவர்கள் அணியின் ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறும் போதும் எமது அவதானம் ஒன்றாக இருக்க வேண்டும், ஏனெனில் இவை அனைத்தும் ஒட்டுமொத்த அணியிற்கும் அதேவாறு அணியின் பின்னணிப் படத்திற்கும் களங்கம் ஏற்படுத்தக் கூடியதொன்று. வீரர்கள் மைதானத்தில் எவ்வாறு நடைமுறைகளை கைப்பற்றுகிறார்களோ அவ்வாறே மைத்தானத்திற்கு வெளியேயும் சிறப்பாக இருக்க வேண்டும். அணிக்கு களங்கம் விளைவிக்காது நடந்து கொள்ள வேண்டும்..”
R.Rishma