தான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குமார் சங்கக்கார எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.