GMOA வைத்தியர்களுக்கு மூளை சரியில்லை என நினைக்கிறேன் – லக்ஷ்மன்…

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்களுக்கு மூளை சரியில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“..இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எதிர்க்கும் மருத்துவர்கள் தங்களது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பரிசோதனை செய்து கொள்வதே மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த வர்த்தக உடன்படிக்கையினால் இலங்கை மருத்துவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

விபரங்களை அறிந்து கொள்ளாது மருத்துவர்கள் இந்த உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றனர். சிங்கப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 25 இலட்சம் ரூபாவாகும். இவ்வாறான ஓர் நிலையில் அவர்கள் இலங்கையில் வந்து சேவையாற்றுவதற்கு அவர்களின் மூளையில் கோளாறு கிடையாது…”